செய்திகள்

யாழ்.வன்­மு­றை­களை தடுப்­ப­தற்கு அவ­சர நட­வ­டிக்­கைக்­குழு: கொழும்பில் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை

யாழ். குடா­நாடு உட்­பட வடக்கில் இடம்­பெற்று வரும் வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் மற்றும் கொள்­ளைகள், கொலைகள், வன்­முறைச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கென அவ­சர நட­வ­டிக்கைக் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நட­வ­டிக்கைக் குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, புனர்­வாழ்வு புன­ர­மைப்பு அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர உட்­பட பல­ரையும் சந்­தித்து பேசு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ். மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்­பி­ர­கா­சத்தின் தலை­மையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒன்­று­கூ­டிய வட­மா­கா­ணத்தைச் சேர்ந்த புத்­தி­ஜீ­விகள் மற்றும் பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் வடக்கில் இடம்­பெற்­று­வரும் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பிலும் அதனை தடுப்­ப­தற்கு எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஆராய்ந்­தனர். இந்த கலந்­து­ரை­யா­டலில் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள், சட்­டத்­த­ர­ணிகள், வைத்­தி­யர்கள், சிவில் அமைப்ப்­களின் பிர­தி­நி­திகள் என பெரு­ம­ள­வானோர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

யாழ். குடா­நாடு உட்­பட வட­ப­கு­தியில் அண்­மைக்­கா­ல­மாக வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களும் கொள்­ளை­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன. மக்­களை அச்­சு­றுத்தும் வகையில் இந்தச் சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதில் பாட­சாலை மாண­வர்­களும் ஈடு­ப­டு­கின்­றனர். அத்­துடன் போதை­வஸ்­துப பாவ­னையுத் அத­க­ரித்து காணப்­ப­ட­கின்­றது. கலா­சார சீர­ழி­வு­களும் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.மக்­களை அச்­சு­றுத்தும் இத்­த­கைய சம்­ப­வங்­களை எவ்­வாறு தடுப்­பது? அதற்­கான நட­வ­டிக்­கைகள் என்ன என்­பது குறித்து இந்தக் கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­ற­வர்கள் கருத்­துக்­களை தெரி­வித்­தனர்.

இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தற்கு காரணம் என்ன என்­பது குறித்தும் சம்­ப­வங்­களை உட­ன­டி­யாக கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தெ­னவும் எதிர்­கா­லத்தில் இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெ­றாமல் தடுப்­ப­தற்­கான நீண்­ட­கால திட்­டங்­களை வகுப்­ப­தென்றும் கலந்­து­ரை­யா­டலில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

குடா­நாட்டில் இயங்கும் வாள்­வெட்டுக் குழுக்­களை கைது­செய்­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இந்தச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் இரா­ணுவ உளவுப் பிரி­வி­னரின் சம்­பந்தம் இருக்­குமோ என்ற சந்­தேகம் எழு­வ­தாக கலந்­து­ரை­யா­டலில் கருத்து தெரி­வித்த ஒரு பிர­தி­நிதி கூறினார். கடந்­த­வாரம் ரல்­லாகம் நீதி­மன்­றத்தில் மட்டும் 4 வாள் வெட்டு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் இதில் 7 பாட­சாலை மாண­வர்கள் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் கலந்­து­யைா­டலில் பங்­கேற்ற சட்­டத்­த­ரணி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

வடக்கில் மாண­வர்கள் தவ­றான வழி­க­ளுக்கு செல்­வ­தற்­கான கார­ணங்கள் என்ன என்­பது குறித்து ஆரா­ய­வேண்­டு­மெ­னவும் இளை­ஞர்கள் பிழை­யான வழி­களில் செல்­வ­தற்­கான கார­ணங்­களைக் கண்­ட­றிந்து நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வேண்­டு­மென்றும் இந்தக் கலந்­து­ரை­யா­டலில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

வாள்­வெட்டு உட்­பட குடா­நாட்டில் இடம்­பெறும் வன்­மு­றை­களை உடன் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கும்­வ­கையில் ஜனா­தி­பதி மற்றும் அமைச்­சர்கள், பொலி­ஸமா அதிபர் ஆகி­யோரை சந்தித்து பேசுவதற்கு அவசர நடவடிக்கை குழுவொன்றும் தெரிவுசெய்யப்பட்டது. இந்தக்குழுவில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் உட்பட 9 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

எதிர்காலத்தில் அரசியல் சார்பற்ற வகையில் வடக்கு மக்களின் நல் வாழ்வை கருத்தில்கொண்டு அமைப்பொன்றை ஆரம்பித்து செயற்படுவதற்கும் நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
R-06