செய்திகள்

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர பொதுவான நினைவுத்தூபிகள் அவசியம் : ஜே.வி.பி.

யுத்­தத்தில் உயி­ரி­ழந்த விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­க­ளா­கட்டும் இரா­ணு­வத்­தி­ன­ரா­கட்டும் பொது­மக்­க­ளா­கட்டும் அனை­வ­ரையும் பொது­வாக நினைவு கூரு­வ­தற்கு பொது­வான “நினைவுத் தூபிகள்” வடக்கு கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் நிர்­மா­ணிக்­கப்­பட வேண் டும் என ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்­நாயக்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பாக தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு முன்­வைத்த சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே பிமல் ரத்நா­யக்க எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் மேலும் உரை­யாற்­று­கையில் யுத்தம் முடி­வுற்ற மே 19 ஆம் திக­தி­யன்று உயி­ரி­ழந்த தமது உற­வு­க­ளுக்கு விளக்­கேற்றி நினைவு கூரும் போது வடக்கு, கிழக்கில் பிரச்­சி­னைகள் தலை­தூக்­கு­கின்­றன.

எனவே, யுத்­தத்தால் உயி­ரி­ழந்­த­வர்கள் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­க­ளா­கட்டும் இரா­ணுவ உறுப்­பி­னர்­க­ளா­கட்டும் பொது­மக்­க­ளா­கட்டும். இவர்கள் அனை­வ­ரையும் நினைவு கூர அவர்கள் சார்ந்த குடும்­பங்­க­ளுக்கு அனு­மதி வழங்க வேண்டும்.

எனவே, வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் பொது­வான “நினைவுத் தூபிகள்” நிர்­மா­ணிக்­கப்­பட வேண்டும். காணாமல் போனவர்­களை பயன்­ப­டுத்தி அர­சியல் செய்­வதை அரசு கைவிட வேண்டும்.

உண்மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்டும். காணாமல்போனவர்­க­ளுக்கு ரூபா ஒரு இலட்சம் வழங்­கப்­ப­டு­வது மனித உயிரை அவர்­க­ளது குடும்­பங்­களை கொச்­சைப்­ப­டுத்தும் செய­லாகும். அத்­தோடு யுத்தக் குற்ற விசா­ர­ணைகள் உட்­பட மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு விசாரணைகள் நடத்தப்படுவது நாட்டின் இறையாண்மையை மீறுவதாக அமையாது என்றார்.

R-06