ரவிராஜ் எம்.பி எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார் ? : பிரதான சாட்சியாளர் நீதிமன்றத்தில் விபரிப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் பிரதான சாட்சியான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி நேற்று நீதிமன்றத்தில் அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக சாட்சியமளித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் சிங்களம் பேசும் சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் இடம்பெற்று வரும் வழக்கில், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டரர் ஜெனரல் ரொஹந்த அபேசூரியவின் நெறிப்படுத்தலில் அவர் சாட்சியமளித்தார்.
இதுவரை தனக்கு கருணா குழுவினரிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் இருந்ததால் அது தொடர்பில் யாரிடமும் வாய் திறக்கவில்லை எனவும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட பாதுகாப்பான சூழலால் அது தொடர்பில் சாட்சியளிக்க தீர்மானித்ததாகவும் தனது சாட்சியத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாவலராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரை படுகொலை செய்த விவகாரம் தொடர்பிலான சாட்சி விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு ஜூரிகள் முன்னிலையில் ஆரம்பமானது. முதலாவது சாட்சியாளரான அரச சாட்சியாக மாற்றப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி முதலாவது சாட்சியாக நேற்றும் இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்தவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு அவர் நேற்று வழங்கிய சாட்சியம் வருமாறு:
கேள்வி- அங்கு யாரை சந்தித்தீர்கள் ?
பதில்- பொரளை கனத்தையிடத்தில் சாமியை சந்தித்தேன்.
கேள்வி- அவரை தனியாகவா சந்த்தீர்கள் ?
பதில்-ஆம் தொலைபேசி வாயிலாக அழைப்பு கொடுத்துவிட்டு சாமியும் மேலும் மூவரும் வருகை தந்தனர்.
கேள்வி-அவர்கள் எதனூடாக நீங்கள் இருக்கின்ற இடத்தை வந்நதடைந்நதனர்?
பதில்-இரண்டு முச்சக்கர வண்டிகளில் வருகை தந்தனர் அவற்றில் ஒன்று கறுப்பு நிறமானது மற்றையது க்ரீம் நித்திலானது.
கேள்வி- சாமி எந்த வாகனத்தில் வருகை தந்தார்?
பதில்- கறுப்பு நிற வாகனத்தில்.
கேள்வி-அவருடன் எத்தனை பேர் வருகை தந்தனர்?
பதில்- நான்கு பேர் வந்தனர்.
கேள்வி- அவர்கள் யாவர்?
பதில்- சாமி ,சரண்,சானுக, உசேன் என்ற நால்வரும் வருகை தந்தனர்.
கேள்வி- உசேன் என்பவைர எவ்வாறு ? எங்கு வைத்து அறிந்துகொண்டீர்? எத்தனை நாட்களாக அவரை அறிவீர்?
பதில்- மூன்று மாதங்கள் அறிவேன் பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றிய போது அறிவேன்.
கேள்வி- அவர் எங்கு தொழில் செய்தார்?
பதில்- கருணா அம்மானிடத்தில் தொழில் புரிந்தார்.
கேள்வி- நீங்கள் குறிப்பிட்ட மூவரும் இங்கு உள்ளனரா? அவர்கைள அடையாளம் காட்டுங்கள்?
பதில்- ஆம் அறிவேன் என்றதன் பின்னர் மூவரையும் அடையாளம் காட்டினார்.
கேள்வி- உங்களை சந்தித்த சாமி என்ன கூறினார்?
பதில்- என்னை நாராஹேன்பிட்டி மாதா வீதிக்கு செல்லுமாறு கூறினார்.
கேள்வி- அவரை சந்திக்கின்ற போது உங்கள் கையில் என்ன இருந்தது?
பதில்- எனது கைகளில் இரண்டு ஹெல்மட்டுக்கள் இருந்தன.ஒன்றை அணிந்திருந்தேன் மற்றையது கையிலிருந்தது.
கேள்வி- உங்களை நோக்கி வந்த சாமி என்பவரின் கைகளில் என்ன இருந்தது?
பதில்- கறுப்பு நிற பை ஒன்றுடன் வந்தார், ஆனால் குறித்த பை செனவிரத்னவிடத்திலேயே இருந்தது. (குறித்த பையினை பிடித்திருந்த வித்தினையும் செய்து காண்பித்தார்)
கேள்வி- அந்த பையின் அளவை அண்ணளவாக கூறுங்கள்?
பதில்- குறித்த பை இரண்டு அடி நீளமானதாக இருக்கும். (நீளம், மற்றும் அகலம் அளந்து பார்க்கப்பட்டது)
கேள்வி- பை தொடர்பில் வேறு என்ன அறிவீர்கள்?
பதில்- வேறு எதுவும் கூறுவதற்கில்லை.
கேள்வி- அதன் பின்னர் என்ன நடந்தது?
பதில்- என்னை மாதா வீதிக்கு செல்லும்படி சாதி தொலைபேசி வாயிலாக குறிப்பிட்டார்.
கேள்வி- அங்கு சென்றபின் என்ன நடந்தது?
பதில்- மாதா வீதியில் குறித்த இடம்மொன்றினை கூறி தாக்குதல் நடத்தப்பட்ட இத்திற்கு 50 மீற்றர் தூரத்திற்கு முன்பாக என்னை நிற்குமாறு தொலைபேசி வாயிலாக குறிப்பிட்டார்.
கேள்வி- நீங்கள் அவ்விடம் சென்றதன் பின்னர் என்ன ஆனது?
பதில்- சாமி கூறியது போன்று மாதா வீதியில் குறித்த இடத்தில் நாரேஹேன்பிட்டி திசையில் பேமன்ட் ஒன்றிண் மீது நான் பயணித்த பல்ஸர் ரக மோட்டார் வாகனத்தினை தரித்திருந்தேன்.
கேள்வி- அங்கிருந்து உங்கள் அவதானம் எந்த பக்கத்தை நோக்கியதாக இருந்தது?
பதில்- நாராஹேன்பிட்டி திசையை நோக்கியதாக இருந்தது.
கேள்வி- பின்னர் எந்த திசையில் பார்த்தீர்கள்?
பதில்- பின்பக்க திசையில் பார்தேன்.
கேள்வி- அங்கு என்ன நடந்தது?
பதில்- கறுப்பு நிற ஜீப் வண்டியொன்றில் வந்திறங்கிய செனவிரத்ன எனக்கு முன்னால் சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் சிவப்பு நிற ஜீப் ஒன்று என்னை கடந்து சென்றது அப்போது செனவிரத்ன அந்த ஜீப் மீது துப்பாக்கிசூடு நடத்தினார்.
கேள்வி- பி்ன்னர் என்ன நடந்தது?
பதில்- செனவிரத்ன சிவப்பு நிற ஜீப் மீது துப்பாக்கிசூடு நடத்தினார்.
கேள்வி- குறித்த வாகனத்தில் இருந்தவர் யார் என அறிய முடிந்தா?
பதில்- இல்லை என்னால் அறியமுடியவில்லை, செனவிரத்னவிடத்தில் கேட்டபோது உனக்கு அவசியமற்ற காரணம் வாகனத்தை நான் குறிப்பிடும் இத்திற்கு செலுத்திச் செல் என்றார்.
கேள்வி- தாக்குதல் நடத்ப்பட்ட போது எந்த ரக துப்பாக்கி பயன்படு்த்தப்பட்டுள்ளது என்பதை அறிந்தீர்களா?
பதில்- ரீ 56 ரக துப்பாக்கி என சத்தினை கொண்டு அறிந்துகொள்ள முடிந்தது, குறித்த துப்பாக்கி இருவகைப்படும் ஒரு வகையிலான ரீ 56 துப்பாக்கியில் அனைத்து தோட்டக்களையும் ஒருமிக்கச் செலுத்த முடியும் மற்றையதில் ஒவ்வொன்றாய் செலுத்த முடியும் அதனில் முதல் கூறியது போன்று அனைத்து தோட்டக்களையும் தொடர்ச்சியாக ஒரே முறையில் வெளிப்படுத்தும் துப்பாக்கியே இந்தச் சம்பவத்திற்கு பாவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.
கேள்வி- ரீ 56 ரக துப்பாக்கியை நீர் பயன்படுத்தியுள்ளீரா? அறிந்தாவது உள்ளீரா?
பதில்- ஆம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் தொழில் செய்த போது அறிந்திருந்தேன்.
கேள்வி- குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் போது சிறிதளவேனும் அந்த துப்பாக்கியின் வகை என்னவென அனுமானிக்கும் அளவிற்கு உங்களுக்கு விளங்கியதா?
பதில்- இல்லை அது சிறிதளவிலும் எனக்கு தெரியவில்லை.
கேள்வி- துப்பாக்கி பிரயோகம் யார் மீது நடத்தப்பட்டது என்று நீங்கள் மற்றவர்களிடத்தில் கேட்டு அறியவில்லையா?
பதில்-செனவிரத்ன துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு எனது மோட்டார் சைக்கில் வந்து அமர்ந்த போது அவரிடத்தில் கேட்டேன் ஆனால் அவரோ அது உனக்கு அவசியமற்ற விடயம் வாகனத்தை நான் கூறும் இடத்திற்கு செலுத்திச் செல் என்றார்.
கேள்வி- அவர் வாகனத்தினை எங்கு செலுத்தச் சொன்னார்?
பதில்- கங்காராமயில் உள்ள கடற்படை புலணாய்வு முகாமிற்கு அழைத்துச் செல்லும் படியும் நாரஹேன்பிட்டி டொரின்டன் ஊடாக அங்கு செல்லுமாறு கூறினார்.
கேள்வி- அங்கு சென்றதன் பின்னர் என்ன நடந்தது?
பதில்- கங்காராமைக்கு சென்று செனவிரத்னவை அவ்விடத்தில் விட்டுவிட்டு நான் அலரி மாளிகைக்கு பாதுகாப்பு பணிகளின் நிமித்தம் சென்றேன்,அன்றய தினமே சென்றுவிட்டேன்.
கேள்வி- நீங்கள் அலரி மாளிகைக்கு சென்றடைந்த நேரத்தினை குறிப்பிடுங்கள்?
பதில்-10:45
கேள்வி- இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் யார் என்பதை நீங்கள் முன்பாகவே அறித்திருந்தீர்களா?
பதில்- இல்லை நான் அறிந்திருக்கவில்லை ஆனால் அலரி மாளிகைக்கு வந்து உயர் அதிகாரி ஒருவரை ஏற்றிச் செல்ல வாகனத்தில் ஏறி வானொலியை இயக்கிய போது மதியச் செய்தி அறிக்கையில் பாராளுமன் உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறினர், அப்போது தான் நான் இதுகுறிந்து அறிந்தேன்.
கேள்வி- இதற்கு முன்னர் ரவிராஜ் தொடர்பில் அறிவீர்களா அவருடன் தொடர்புள்ளதா?
பதில்- இல்லை.
கேள்வி- அவர் பாராளுமன்றத்தில் எந்த கட்சியை பிரதிநிதிதுவப்படுத்துகின்றார்?
பதில்- ரீ.என்.ஏ ( தமிழ் தேசிய கூட்டமைப்பு)
கேள்வி- அவரின் பேச்சுக்களை கேட்டுள்ளீர்களா? எந்த மொழியில் கேட்டுள்ளீர்கள்?
பதில்- ஆம் சிங்கள மொழியில் அவர் பேச்சுக்களை கேட்டுள்ளேன்.
கேள்வி- அவருடன் சிக்கல் ஏதேனும் இருந்ததா?
பதில்- இல்லை பிரச்சினைகள் எவையும் இல்லை.
கேள்வி- சம்பவத்தின் பின்னர் நீங்கள் கங்காராமைக்குச் செல்லவில்லையா?
பதில்- அடுத்த நாள் சென்றேன்.
கேள்வி- அங்கு யாரெல்லாம் இருந்தார்கள்?
பதில்- செனவிரத்ன, வஜீர ஆகியோர் இருந்தனர்.
கேள்வி- அதன் பின்னர் யாருடனும் பேசினீர்களா?
பதில்- ஆம்.
கேள்வி- அங்கு என்ன நடந்தது?
பதில்- நாங்கள் முதல் நாள் பயணித்த மோட்டர் சைக்கில் துண்டாக வெட்டியெடுக்கப்பட்டது, கிறைண்டர் இயந்திரனால் வெட்டப்பட்டது.
கேள்வி- நீங்கள் எதற்காக அன்று மோட்டார் சைக்கிளை பயன்படுத்தினீர்கள்? கங்காராமையில் வைத்து வெட்டபடபட்டது உங்கள் மோட்டார் சைக்கிள் தான் என்று எவ்வாறு உறுதியாக அறிந்தீர்கள்?
பதில்- பாதுகாப்பு கடமைகளுக்காக பயன்படுத்தினேன். குறித்த மோட்டர் சைக்கிளில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்து. அதனை கொண்டு அது நான் செலுத்தி மோட்டார் வண்டி என அறிந்தேன்.
கேள்வி- மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடு போலியானது என எவ்வாறு அறிந்தீர்?
பதில்- அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலக்கத்தட்டினை பார்க்கிலும் இது சிறியதாக இருந்தது, அதன் எழுத்துக்களும் தடிப்பம் குறைவாக இருந்தது.
கேள்வி- பி்ன்னர் இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு நிறுவனத்திற்கு அறிவித்தீர்களா?
பதில்- இல்லை.
கேள்வி-நீங்கள் இவ்வளவு நாட்கள் மெளனமாக இருந்ததன் நோக்கம் என்ன?
பதில்- நோக்கம் என்று எதுவும் இல்லை. உண்மையை கூறினால் கருணா தரப்பினரால் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்திலேயே உண்மையை கூறவில்லை.
கேள்வி- அதன் பின்னர் எப்போது இது தொடர்பில் நீங்கள் குற்றப்பிரிவுக்கு தெரிவித்தீர்கள்?
பதில்- நான் தெரிவிக்கவில்லை, மாறான நான் கொட்டஞ்சேனையில் எனது தங்கையின் வீட்டிற் தங்கியிருந்த போது பொலிஸார் என்னை வந்து விசாரித்தனர்.
கேள்வி- உங்கள் மீது வேறு ஏதும் குற்றச்சாட்டுக்களில் வழங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா?
பதில்- ஆம் எட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்று முற்றுபொற்றுவிட்டது மற்றயவைக்கு தீர்ப்புகள் இன்றும் கிடைக்களில்லை.
கேள்வி- இந்த விவகாரத்தில் உங்களை தொடர்பு கொண்ட சாமி தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?
பதில்- சாமி என்பவர் 5 அடி உயரம் இருப்பார் அவரின் வலது கையிலர் பச்சை குத்தியிருப்பார்
கேள்வி- பச்சை எவ்வாறாக இருக்கும்?
பதில்-மிருக அடையாளம் உள்ளது,
கேள்வி- சரண் தொடர்பில் கூறுங்கள்?
பதில்- அவரும் 5 அடி உயரமிருப்பார் அவரின் வலது கையிலும் பச்சை குத்தியிருப்பார் மொட்டை அடித்திருப்பார்,
கேள்வி- சம்பவத்தின் பின்னர் சரணை கண்டீர்களா? தொலைபேசியிலும் தொடர்பில் வரவில்லையா?
பதில்- இல்லை அவரை தொடர்பு கொள்ளவில்லை தொலைபேசியிலும் கொள்ளவில்லை,
கேள்வி- அவர் இருக்கும் இடத்தினை அறிந்தீர்களா?னை அறிந்தீர்களா?
பதில்- இல்லை அறியவில்லை
கேள்வி- குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது செனவிரத்ன இறங்கிய இதடத்தில் வைத்தே துப்பாக்கிச்சூட்டினை நடத்தினார?
பதில்- இல்லை சற்று தூரத்திலிருந்தே நடத்தினார்,
கேள்வி- இவ்வாறு 9 வருடங்கள் ஏன் உண்மையை மறைத்தீர்கள்? தற்போது சொல்வதற்கு எவ்வாறு துணிச்சல் வந்தது?
பதில்- கருணா தரப்பினர் மீதான அச்சமே காரணம் ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பின்னரேயே உண்மையை கூறும் அளவிற்கு துணிச்சல் வந்நது,
அதனையடுத்து இந்த வழக்கின் குறுக்கு விசாரணைகள் இடம்பெற்ற போது வழக்கறிஞர் ரசிக பாலசூரிய வினவிய கேள்வி ஒன்றின் போது வாக்குமூலம் அளித்த திகதி தொடர்பில் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக குறித்த வாக்குமூலம் தொடர்பில் தகவல்களை திரட்டி மன்றில் சமர்பிக்குமாறு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டதன் பின்னர் வழக்கினை இன்றய தினத்திற்கு ஒத்திவைத்தார். -(3)




