செய்திகள்

லண்டனில் ஜூலை இனவழிப்பு 34 வது ஆண்டு நினைவு நாள்: பிரித்தானிய பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு

லண்டனில் ஜீலை இனவழிப்பின் 34ஆவது ஆண்டின் நினைவு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

லண்டனிலுள்ள 10 Downing street என்ற இடத்தில் மிக எழுச்சிகரமாக இனவழிப்பு நினைவு நடைபெற்றது. நிகழ்வினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பெரும் துயரம் படிந்த இனவழிப்பு நாளான இன்றைய தினம் பல நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். அத்துடன் பிரித்தானிய பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

IMG_6942

N5