செய்திகள்

வடமராட்சி கிழக்கில் பொலிஸார் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயார் -வி.மணிவண்ணன்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மாளிகை திடலில் பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கடும் குற்றவாளிகளை கூட தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியோ அதிகாரமோ கிடையாது.அப்படி இருக்கையில் ஊரடங்கு வேளையில் பொலிஸார் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத காட்டு மிராண்டித்தனமான செயல். இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.அத்துடன் வடமராட்சி கிழக்கு, மாளிகை திடலில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.(15)