வரவு- செலவு திட்டம் ஒரே பார்வையில்………
2017 ஆம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்ட உரை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியேரின் தமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் தற்போது வாசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அங்கு குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயங்கள்…,
சிறு வியாபாரிகளுக்கு சலுகைக் கடன்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.
* கடைகள் இரவு 11 மணி வரை திறந்து வைக்கப்படுதல் வேண்டும். இதற்காக 11 மணிவரைக்கும் தனியார் பஸ்களை இயக்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது
*ஒவ்வொரு நோயாளியும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது, சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட செலவு தொடர்பிலான பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
*500,000 ரூபாய் பெற்று அதனால் கடன் தகவல் பணிகயத்தில் பெயர் பதியப்பட்டதால், அவதிப்படுவோர்க்கு, அவர்களது வர்த்தகத்தை தொடர்ந்து செய்துக்கொண்டுச் செல்வற்கு அனுமதி
*அனைத்து ஒளடத நிலையங்களும், ஒளடத அதிகார சபையில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
*வணிகங்கங்களை பதிவு செய்வதற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
* வியாபார நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாத காணிகளை, வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
*வியாபாரங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும்.
* பதிவு செய்யப்படாத மருந்து கடைகளை நடத்திச் செல்வோரை கைதுசெய்து 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தல்
* கராபிட்டிய, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில், விசேட சிறுவர் பிரிவுகளை ஏற்படுத்த, 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
* கராப்பிட்டி, யாழ்ப்பாணம், அம்பாறை ஆதார வைத்தயிசாலையில் குழந்தை மையங்களை அமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*அனைத்து மருந்தகங்களும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும்
* தாதியர் பயிற்சிப் பாடசாலைகளுக்காக, 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*தேசிய அறக்கட்டளைக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
* தொழில்சார் கல்விக்கான தரத்தை ஏற்படுத்துவதற்காக, 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
* வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*பாலர் வகுப்பு மாணவர்கள், ஒவ்வொரு தவணை முறையிலும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
*பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பகிடிவதை குறித்து அறிவிப்பதற்கு நிலையங்கள் அமைக்கப்படும்
*களனி பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
*பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனத்துக்கு, வெட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு இணையும் மாணவர்கள் 15 ஆயிரம் பேருக்கு, 8 இலட்சம் ரூபாய் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* நல்ல பெறுபேறுகளை பெறும் மாணவர்ளுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்
*வௌிநாட்டு மாணவர்கள் 500 பேர், இலங்கையில் கல்வி கற்பதற்கு 500 விசாக்கள் வழங்கப்படும்.
*கல்விச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச மாணவர்ளுக்கான ஒன்றுக்கு மேற்பட்ட விசாக்கள் வழங்கப்படும
*பட்டப்படிப்புக்களை மாணவர்களுக்கு வழங்கும் வாய்ப்பு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்
*எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குபின்னர், பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்கள் இரவு வரை நீடிக்கப்படும்
*பல்கலைக்கழக மாணவர்கள், சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்விகற்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*இளைஞர் – யுவதிகளுக்கான உயர்க் கல்வியை வழங்கும் நடவடிக்கையை, அரசாங்கத்தினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. அதற்கு, தனியார்த் துறையினரும் முன்வர வேண்டும்.
*கராப்பிடடிய வைத்தியசாலையில் 10 மாடிக்கட்டடம் அமைக்கப்படும். பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புக்கள் 8 மணிவரை நீடிக்கப்படும்
* பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக, 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
*யாழ்ப்பாணம், ஜயவர்த்தனபுர, களனி, பேராதெனிய, ருஹுணு ஆகிய பல்கலைக்கழகங்களிலுள்ள பாடங்கள் தொடர்புடைய கல்விமுறைமை அறிமுகப்படுத்தப்படும்
*பல்கலைக்கழக மாணவர்களை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி பயில 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
*சுகாதார காப்புறுதிக்காக 2,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*ஜயவர்தனபுர, களனி, யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகங்களில், கல்விசார் பட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை
*புள்ளிவிவரவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்காக, 13 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*பாடசாலையில் நல்ல பெறுபேறுகளை வெ ளிப்படுத்தும் மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில் திட்டங்கள். இவர்களுக்கு மாதந்ததம் 2,000 ரூபாய் வழங்கப்படும்
*பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்வியைத் தொடர்வதற்கான மாணவர் இணைப்பு, 2020ஆம் ஆண்டில் 50 ஆயிரத்தினால் அதிகரிக்கப்படும்.
* சுகாதார வசதிகளுக்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
* 2020இல், பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50,000 ஆக அதிகரிக்கப்படும்.
*கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்த போதிலும், முதலீடுகள் தேவையான பிரிவுகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
*தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விதிமுறைகள் கொண்டுவரப்படும்
*5 வயது முதல் 19 வயது வரையான 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு, ஒரு பிள்ளைக்கு 2 இலட்சம் ரூபாய் வீதம் காப்புறுதி வழங்க நடவடிக்கை
*சிறுவர்களுக்கான 200,000 காப்புறுதிகளும் சேமிப்புக்கணக்கும்
*கேகாலை மற்றும் பதுளையிலுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
* விசேட கல்வியை பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு 50 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக அதிகரிப்பு
*விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக 175 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*2017ஆம் ஆண்டில் 100 பாடசாலைகளில் நீர் , மின்சார வசதிகளுக்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
* கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரணதரம் ஆகியவற்றுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்
*பாடசாலைகளுக்கான அடிப்படை தேவைகளை வழங்கும் பொருட்டு 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*கல்வித்துறையை மேம்படுத்துவற்காக, 17840 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்
*பாடசாலை மாணவர்களுக்கு இலவச டெப்கள் வழங்கப்படும். Wifi அமைத்துக்கொடுக்கப்படும் . இதற்கு 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*கல்விக்கு 90,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
*கும்புக்கன் ஓயா திட்டம் மொனராகலை மாவட்டத்தில் செயற்படுத்தப்படும்.
*50 வேலாண்மை ஆய்வு நிலையங்களை அமைப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம்
*20,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*மொரகாகந்தை மற்றும் உமா ஓயா திட்டங்கள் விரைவில் நிறைவடையும் என்றும் நம்புகின்றோம். இதற்கு 60 045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
* மொத்தமான கோழிகளை விற்பனைச் செய்யும் விற்பனையாளர்கள், கோழி ஒரு கிலோகிராம் 420 ரூயாய்க்கு விற்பனை செய்தல் வேண்டும். இந்தத்துறையை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கரையோர மாவட்டங்கள் 10க்கான ஜீவனோபாயத்தை அதிகரித்துக்கொள்வதற்கு, 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*100 புதிய நீர்க்கிராமங்களை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாய்
*கோழிகளின் உணவுக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கான இறக்குமதி தீர்வை நீக்கப்படும்.
*ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் பகுதிகளில் மீன் பண்ணைகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*கரையோரப் பாதுகாப்பு வலயங்களை அபிவிருத்தி செய்ய 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடித்துறையை முன்னேற்றுவதற்கு 1.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*மொரகாகந்தை மற்றும் உமா ஓயா திட்டங்கள் விரைவில் நிறைவடையும் என்றும் நம்புகின்றோம். இதற்கு 60 045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*மொத்தமான கோழிகளை விற்பனைச் செய்யும் விற்பனையாளர்கள், கோழி ஒரு கிலோகிராம் 420 ரூயாய்க்கு விற்பனை செய்தல் வேண்டும். இந்தத்துறையை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
* யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கரையோர மாவட்டங்கள் 10க்கான ஜீவனோபாயத்தை அதிகரித்துக்கொள்வதற்கு, 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*100 புதிய நீர்க்கிராமங்களை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாய்
*கோழிகளின் உணவுக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கான இறக்குமதி தீர்வை நீக்கப்படும்.
*ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் பகுதிகளில் மீன் பண்ணைகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*கரையோரப் பாதுகாப்பு வலயங்களை அபிவிருத்தி செய்ய 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடித்துறையை முன்னேற்றுவதற்கு 1.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*கரையோர மீன்பிடி வலய அபிவிருத்திக்கு 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*இறப்பர் உற்பத்திக்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*கல்விக்கு 9 இலட்சம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
*கும்புக்கன் ஓயா திட்டம் மொனராகலை மாவட்டத்தில் செயற்படுத்தப்படும்.
*50 வேலாண்மை ஆய்வு நிலையங்களை அமைப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம்
*0,000 ஏக்கர் காணிகளை அபிவிருத்தி செய்ய, முதலீட்டாளர்களுக்கு 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*மொரகாகந்தை மற்றும் உமா ஓயா திட்டங்கள் விரைவில் நிறைவடையும் என்றும் நம்புகின்றோம். இதற்கு 60 045 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*மொத்தமான கோழிகளை விற்பனைச் செய்யும் விற்பனையாளர்கள், கோழி ஒரு கிலோகிராம் 420 ரூயாய்க்கு விற்பனை செய்தல் வேண்டும். இந்தத்துறையை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கரையோர மாவட்டங்கள் 10க்கான ஜீவனோபாயத்தை அதிகரித்துக்கொள்வதற்கு, 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
* 100 புதிய நீர்க்கிராமங்களை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாய்
*கோழிகளின் உணவுக்காக இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கான இறக்குமதி தீர்வை நீக்கப்படும்.
*ஹம்பாந்தோட்டை மற்றும் மன்னார் பகுதிகளில் மீன் பண்ணைகளை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*கரையோரப் பாதுகாப்பு வலயங்களை அபிவிருத்தி செய்ய 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
*ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள மீன்பிடித்துறையை முன்னேற்றுவதற்கு 1.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
*கரையோர மீன்பிடி வலய அபிவிருத்திக்கு 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
n10




