செய்திகள்
வவுனியாவில் இருட்டறை மெழுகுவர்த்தி வெளியீடு
வவுனியா ஊடகவியலாளர் எஸ்.எம்.சர்ஜான் எழுதிய ‘இருட்டறை மெழுகுவர்த்தி’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் செட்டிகுளம் பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டில் வெண்கல செட்டிகுளம் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.முகுந்தன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஆண்டியாபுளியங்குளம் கிராமத்ததைச் சேர்ந்த எஸ்.எம்.சர்ஜான் தனது ஊரில் தனது பாடசாலையிஜல் வைத்து இந்த நூலினை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, அயூப் அஸ்மின், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.



n10