வவுனியாவில் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி: 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவு
வவுனியாவில் 10 வயது சிறுமி ஒருவர் மீது துஸ்பிரயோக முயற்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் முயற்சியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி ஒருவரை அழைத்து அயல்வீட்டு 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட போது சிறுமி கதறிக் கொண்டு தப்பியோடியதை அடுத்து சிறுமியின் வீட்டுக்கு தகவல் தெரிந்தமையால் துஸ்பிரயோக முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபரான 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
N5




