வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு: முடிவுகள் 10 மணி முதல்
இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மாலை 4.00 மணிக்கு நிறைவுற்ற நிலையில் மலையகம், உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளின் வாக்கு பெட்டிகளும் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவயில் இருந்து வாக்கு பெட்டி வாக்கு எண்ணும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் போது மக்கள் ஆரவாரம் செய்து வாக்கு பெட்டியை சந்தோஷத்துடன் அனுப்பி வைப்பதை படங்களில் காணலாம்.
வாக்கு எண்ணும் பணி ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. இரவு 10 மணி முதல் தபால் மூல வாக்குகளின் விபரங்கள் வெளிவரும் என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.







