விமல் வீரவன்ச தலைமையில் புதிய கூட்டணி அமைக்க முடிவு!
சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் விமல் வீரவன்ச தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவை மண்டப வளாகத்தில் புதிய கூட்டணி அறிமுகம் செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதன் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் சுயாதீனக் கட்சிக் கூட்டணியின் வாராந்தக் கூட்டம் நேற்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
-(3)




