செய்திகள்
டெஸ்ட் கிரிக்கெட் மீது கைவைக்கவேண்டாம்- மகேல
டெஸ்ட் கிரிக்கெட் மீது கைவைக்கவேண்டாம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேலஜெயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை அதனால் அதனை திருத்தவேண்டிய தேவையில்லை,பகலிரவு டெஸ்ட் போட்டிகள் குறித்து எனக்கு ஆர்வமில்லை, ஆனால் அவ்வாறான ஓன்றிரண்டு போட்டிகளை நடத்தலாம்,
ஆனால் டெஸ்ட்போட்டியை நான்கு நாட்களிற்கு குறைப்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்,டெஸ்ட் போட்டியில் முடிவு தெரிவதற்கு 5 நாட்கள் அவசியம், நான்கு நாட்கள் போதாது,
சமீபத்திய ஆஸ்திரேலிய தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளும் ஐந்து நாட்கள் நீடித்தன. இந்திய துணைக்கண்டத்தில் டெஸ்டபோட்டிகளில் முடிவு தெரிவதற்கு ஐந்து நாட்கள் அவசியம்.
டெஸ்ட் போட்டிகளில் சாதிக்ககூடிய திறமையான இளம்வீரர்கள் பலர் அறிமுகமாகியுள்ளனர்,அவ்வாறான நிலையில் டெஸ்ட் போட்டிகள் மேலும் சுவாரஸ்யமானவையாக மாறப்போகின்றன இதன் காரணமாக அதில் மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.