செய்திகள்

தென்னாபிரிக்காவிலும் சிறப்பாக விளையாடுவோம்- ஹேரத்

இலங்கை அணியின் சமீபத்தை டெஸ்ட் வெற்றிகள் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் அந்த அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அணித்தலைவர் ரங்கஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை 3-0 என்ற அடிப்படையில் தோற்கடித்தது சிம்பாப்வே தொடர் குறித்த நம்பிக்கைகளை எங்களிற்கு வழங்கியது,தற்போது நாங்கள் சிம்பாப்வே அணியை தோற்கடித்து ஐந்துடெஸ்;ட்களில் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளோம் இந்த வெற்றிகள் தென்னாபிரிக்க தொடரிற்கான நம்பிக்கையை எங்களிற்கு தரும் என நான்நம்புகின்றேன்,வீரர்களின் நம்பிக்கை குறித்து நான் 100 வீதம் நம்பிக்கைகொண்டுள்ளேன், நாங்கள் தென்னாபிரிக்காவிலும் சிறப்பாக விளையாடுவோம்,
உலகின் அனைத்து டெஸ்ட் அணிகளிற்கு எதிராகவும் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியது சாதனைதான்,இந்த வரிசையில் நான் மூன்றாவது நபர் என முதலில் எனக்கு தெரியாது,அது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்
அணிக்கு தலைமை தாங்கிய ஓவ்வொரு நிமிடத்தையும் நான் அனுபவித்தேன்,நான்  இலங்கையின் பல அணித்தலைவர்களின் கீழ் விளையாடியுள்ளதால் எனக்கு அனுபவம் உள்ளது,ஓவ்வொரு வீரரும் அணிக்காக பங்களிப்பு செய்யும்போது அணிக்கு தலைமை தாங்குவது  இலகுவான விடயம்.
பந்துவீச்சாளர்களில் சுரங்கலக்மாலும், தில்ருவான் பெரேராவும்  பாராட்டப்படவேண்டியவர்கள்,லகிரு குமார அணிக்கு தேவையான நம்பிக்கையை வழங்கினார்,அவர் இலங்கைக்கான சிறந்த எதிர்காலம் போல தென்படுகின்றார் என ஹேரத் குறிப்பிட்டுள்ளார்