செய்திகள்

முதல் டெஸ்டில் இலங்கை தோல்வி

இலங்கை தென்னாபிரிக்க அணிகளிற்கு இடையில் போர்ட்எலிசபெத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 206 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.இதன் மூலம் மூன்று டெஸ்ட்கள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
ஐந்தாவது நாளான நேற்று இலங்கை அணி எதிர்த்து போராடுமா என்ற எதிர்ப்பு காணப்பட்ட போதிலும் அணித்தலைவர் மத்தியுஸ் மற்றும் தனஞ்செய சில்வா ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க இலங்கை  தனது இரண்டாவது இனிங்ஸின் அனைத்து விக்கெட்களையும் வேகமாக இழந்து பாரிய தோல்வியை தழுவியது.
தென்னாபிரிக்க அணிசார்பில் ரபாடா மற்றும் மகராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதேவேளை இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அணித்தலைவர் மத்தியுஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.பந்து வீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாக பந்து வீசினர் என்றே நான் கருதுகிறேன்,எனினும் துடுப்பாட்ட வீரர்கள் மிகுந்த சிரமப்படவேண்டியிருந்தது,இனிங்ஸின் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடினால் நாங்கள் போராடவேண்டியதில்லை,அடுத்த போட்டிக்கு இன்னமும் சில நாட்களே உள்ளன அதற்கு எங்களை சிறந்த முறையில் தயார்படுத்திக்கொள்ளவேண்டும், இந்த போட்டியில் சில சாதகமான அம்சங்கள் காணப்பட்டாலும் வெற்றிபெறுவதற்கு அவை போதுமானவையல்ல என குறிப்பிட்டுள்ளார்