20 வது திருத்தம் குறித்து இன்று நாளையும் பாராளுமன்றத்தில் விவாதம்
இருபதாவது திருத்தம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தலைமையில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில்:
“இருபதாவது திருத்தம் தொடர்பாக கட்சித்தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான 20 ஆவது திருத்தத்தினால் சிறுபான்மை இன கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அக்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள சூழ் நிலையில் இன்று கூடும் பாராளுமன் றக் கூட்டத்தொடரில் 20ஆவது திருத்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை இரண்டு தினங்கள் நடத்துவதற்கு இணக்கம் காணப் பட்டது.
அரச தரப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், டக் ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈ.பி.டி.பி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் விருப்பத்தை தெரிவித்தன. எதிர்க்கட்சித்தலைவர் நிமால் சிறிபால டி சில்வா மட்டும் இவ்விவாதத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதற்கமைய இன்றும் நாளையும் 20 ஆவது திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இரண்டு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்” என்றார்.
இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அண்மையில் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெ ளியிட்ட கருத்து தொடர்பிலும் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவாதத்தையும் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.