50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் தோட்ட மக்களிடம் கையளிப்பு (படங்கள்)
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள 250 தோட்டங்களுக்கான தோட்டத்தில் வாழும் மக்களுடைய விசேட தினங்களுக்காக பாவிப்பதற்கான 50 இலட்சம் ரூபா பெறுமதியான நாற்காலிகளும், கூடாரங்களும் 18.05.2015 அன்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களால் கொட்டகலை ஆலய மண்டபத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் புத்தரசிகாமணி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.














