75 வயதில் தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப் பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.
இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு – முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகிஎன்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்.
1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
மேலும், 800m ஓட்டபோட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.
75 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
-(3)




