செய்திகள்
பிபீ.ஜயசுந்தரவிடம் நிதி மோசடி ஒழிப்பு பிரிவு விசாரணை
திரைசேறியின் முன்னாள் செயலாளர் பிபீ.ஜயசுந்தரவிடம் நிதி மோசடி ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்தியுள்ளது.
ஹெஜிங் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்தே விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
நேற்றைய தினம் முன்னாள் மத்திய வங்கி ஆணையாளரிடம் விசாரணை நடந்தமை குறிப்பிடத்தக்கது.




