தாயகநிலப்பரப்பில் பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தாயகநிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன.வன்னிமாவட்டத்தையும் அந்தநிலைக்கு கொண்டுசெல்கின்றார்கள். எனவே இந்த தேர்தலுக்குபின்னர் வரக்கூடியநிலைமையை தொடர்பாக நாம் ஆராயவேண்டும்.இன்று புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவிருக்கின்றது.அது ஒரு ஒற்றையாட்சியாக இருக்கப்போகின்றது.அதனை ஆதரிக்கபோவதாக கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருக்கின்றது என தமிழ்தேசியமக்கள் முண்ணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாகவும். இன அழிப்பிற்கு நீதிகோரியும் இறுக்கமான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.பெரும்பாண்மை கிடைத்துள்ள புதிய அரசாங்கம் எங்களை திரும்பியேபார்க்கவேண்டிய தேவைஇல்லை.எந்த தரப்பின் ஆதரவும் அவர்களிற்கு தேவையில்லை.அவர்கள் போர்க்குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள்.எனவே பொறுப்புக்கூறல் என்றவிடயத்தை இறுக்கமாக முன்னெடுப்பதன் ஊடாகமாத்திரமே அவர்கள் எங்களை திரும்பிபார்க்கும் நிலைமை உருவாகும்.
புதிய அரசியலமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் வடகிழக்கு தமிழ்மக்கள் ஒன்றிணைந்து ஏகோபித்த எதிர்ப்பைநிலைநாட்டியே ஆகவேண்டும்.எனவே ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்ற சதியைமுறியடிப்பதற்கு மக்களை அணிதிரட்டி கட்டமைக்கும் பணிகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.
யாழில் மாத்திரமின்றி ஏனையமாவட்ங்களிலும் அதனை முன்னெடுப்பதற்காக எமது கட்சியை சேர்ந்த கயேந்திரனுக்கு தேசியபட்டியல் ஆசனத்தைவழங்கியிருந்தோம்.ஒற்றையாட்சியை முறியடிப்பதற்கு யாழைத்தவிர ஏனையமாவட்டங்களிலும் எமது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.இந்த இனத்தின் உரிமைகளைதொடர்ந்தும் உயிருடன்வைத்திருப்பதுடன் எமது உரிமைகைளை அனுபவிக்ககூடியவகையிலே தமிழ்தேசத்தின் அங்கீகாரம்பெற்ற ஒரு அரசியல்தீர்வை நோக்கிநாம் பயணிப்போம்.உங்களுடைய உழைப்பும் முயற்சியும் வீண்போகாது.எமது உரிமைகைளை அனுபவிக்ககூடியவகையிலே தமிழ்தேசத்தின் அங்கீகாரம்பெற்ற ஒரு அரசியல்தீர்வை நோக்கி பயணிப்போம் என வவுனியா கனகராயன்குளம் பகுதிக்கு விஐயம்செய்த அவர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)




