தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமொன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கோட்டாபய அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டத்தில் கூட்டமைப்பும் களமிங்கியுள்ளது.அதற்கமைய இது குறித்து ஆராயும் பொருட்டு இக்கூட்டம் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.இதன்போது புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகள், சமகால அரசியல் நிலவரங்கள், ஜெனீவா தீர்மானங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.இதன்போது புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகள், சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் ஐ.நா. தீர்மான விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவுள்ளது.(15)




