செய்திகள்
வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்கு
வெல்லவ புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு புகையிரதம் ஒன்று தடம் புரண்டது.இதன்காரணமாக வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்திருந்தது.
இன்னிலையில் வடக்கு மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் இன்று புதன்கிழமை அதிகாலை தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.(15)




