செய்திகள்

தெளிவத்தை ஜோசப்பின் இறுதிக் கிரியை இன்று

ஈழத்து மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான மறைந்த தெளிவத்தை ஜோசப்பின் இறுதிக் கிரியை இன்று நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை முற்பகல் அவர் காலமானார்.

அவரின் பூதவுடல் நேற்று (22) முதல்   இன்று பிற்பகல் 2.30 வரை வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நல்லடக்க ஆராதனைகள் இடம்பெற்று கொழும்பு 14 மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-(3)