செய்திகள்

யாழில் போதைப் பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கையில் உயர்வு!

யாழ்.மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகரிப்பானது முன்னைய ஆண்டுகளை விட பல மடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

-(3)