செய்திகள்
மஹிந்தவுக்கு ஆதரவான குருநாகலை கூட்டத்தில் 57ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் (படங்கள்)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குமாறு வலியுறுத்தி குருநாகலையில் நேற்று நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட 57ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
தினேஷ் குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவன்ச ஆகியோரின் கட்சிகள் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்;திரக் கூட்டமைப்பின் கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டதுடன் அவர்களுடன் எம்.பிக்களும் , மாகாண முதலமைச்சர்களும் , மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.








