யாழ்.குப்பிளானில் பார்த்தீனியத்தின் பரம்பல் மீண்டும் அதிகரிப்பு (படங்கள்)
யாழ்.குப்பிளான் வடக்கில் நச்சுச் செடியான பார்த்தீனியத்தின் பரம்பல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் கால்நடைகளும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாகப் பெய்த மழையை அடுத்தே பாதீனியச் செடிகள் பரவலாக முளைக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த வருடம் வடமாகாண விவசாய அமைச்சு பார்த்தீனியத்தை ஒழிக்கப் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்த போதும் பார்த்தீனியம் குறைந்தபாடாக இல்லை எனத் தெரிவிக்கும் பொதுமக்கள் இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-









