செய்திகள்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மேயில் நிறைவேறும்!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-(3)




