செய்திகள்

முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நினைவேந்தல் ஆரம்பம்

முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி இடம்பெற்று வருகின்றது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் போரில் 14 உறவுகளை இழந்த, மன்னாரைச் சேர்ந்த கொன்சியூலஸ் வினிதா எனும் தாயொருவரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

இந்த நினைவேந்தலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறுவதற்காக அவர்களின் உறவினர்களும் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த மக்களும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.இதனை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.(15)