செய்திகள்

ஜெரோம் பெர்னாண்டோவின் மனு தொடர்பான அறிவித்தல்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த, நீதிப்பேராணை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில், அடிப்படை ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இன்று (வியாக்கிழமை) குறித்த மனு, நீதியரசர்களான, சோபித ராஜகருணா மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-(3)