செய்திகள்

சர்வதேச மனக்கணிதப் போட்டி: யாழில் 19 மாணவர்கள் தெரிவு

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை குறித்த போட்டியில் யாழிலிருந்து  மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 03ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-(3)