செய்திகள்

உயர்தர வகுப்புகள், கருத்தரங்குகளுக்குத் தடை!

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் நாடெங்கிலும் 2300 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.

4ஆம் திகதி முதல் ஜனவரி 31ஆம் திகதி வரையில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இதன்படி இந்தப் பரீட்சையுடன் தொடர்புடை கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட நடவடிக்களுக்கு டிசம்பர் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கமையவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி இந்த காலப்பகுதியில் இந்த பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , கலந்துரையாடல்கள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் , ஒன்று கூடல்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

-(3)