செய்திகள்

சிறையில் சுத்தம் செய்யும் பணியில் அலோசியஸ்

நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் மற்றைய அதிகாரி வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இருவரும் தற்போது பணித் துறைக்கு அனுப்பப்படும் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 8 மணியளவில் இரு பிரிவுகளில் இருந்து இருவரும் வெளியே அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் இருவரும் பிற்பகல் 3.30 மணி வரை வேலைப் பிரிவில் பணிபுரிவார்கள் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்கள் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் பணிப் பிரிவில் சிறு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடத்தை துடைத்து சுத்தம் செய்யவும் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அவரது நிறுவனத்தின் மற்றைய அதிகாரி ஆகியோரை சிறைச்சாலையில் வைத்து வைத்தியர் ஒருவர் பரிசோதித்துள்ளார்.

இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

-(3)