செய்திகள்

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் இந்திய விமான சேவைக்கு பாதிப்பு

வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு பின்னர் வெடித்துள்ளது.

இதனால் செங்கடல் முழுவதும் தெற்காசியாவை நோக்கி ஒரு பாரிய சாம்பல் மேகம் பரவியதால், இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவில் நேற்று விமானச் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

கண்ணூரில் இருந்து அபுதாபிக்குச் சென்ற விமானம் உட்படப் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

அத்துடன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளனர்.

12,000 ஆண்டுகளுக்கு பின் எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலை காரணமாக அதன் சாம்பல் வேகமாக இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.