முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் 110 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டது
முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 அன்று இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்து காணாமல் போயுள்ள 110 பேரின் விபரங்களை இவர்கள் சரணடைவதை கண்கண்ட சாட்சியங்களை மேற்கோள் காட்டி சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்த்திட்டம் (இலங்கை) இன்று திங்கள் கிழமை அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளது.
இந்த பெயர்ப் பட்டியலில் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ், பேபி சுப்பிரமணியம், இளம்பரிதி, யோகி, கரிகாலன், தங்கன், லோரன்ஸ் திலகர், யோகி, இசைப்பிரியா மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
2009 மே 18 அன்று நூறுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளின் இராணுவ மற்றும் பொதுமக்கள் நிர்வாக தலைவர்கள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைவதை பலர் பார்த்ததாகவும், இவ்வாறு சரண் அடைந்தவர்கள சோதனையிடப்பட்டு வட்டு வாய்க்கால் பாலத்துக்கு சற்று தென் பகுதியில் முட் கம்பிகளினால் அடைக்கப்பட்ட பகுதிக்குள் இராணுவத்தினர் வசம் இருக்கும்போது இறுதியாக காணப்பட்டதாகவும் யஸ்மின் சூக்காவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை கண்ட சாட்சியங்கள் பாதுகாப்பு காரணமாகவும் தமது குடும்ப உருப்பினர்களுக்கெதிரான பழிவாங்கல் அச்சம் காரணமாகவும் வெளிநாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ. நா. செயலாளர் பான் கி மூன் 2011 இல் அமைத்த மூவர் கொண்ட குழுவின் ஒரு அங்கத்தவரான யஸ்மின் சூக்கா, தென் அபிரிக்கா மற்றும் சியாரா லியோன் ஆகிய நாடுகளின் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுக்களின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் மனித உரிமைகளுக்கான மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் அவர் பணியாற்றுகிறார்.
சரண் அடைந்தவர்களில் பலர் கத்தோலிக்க பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப்புடன் சரண் அடைந்திருந்ததாகவும், தன்னுடன் சரண் அடைந்தவர்களின் பெயர் விபரங்களை எடுத்து வைத்திருந்த இந்த பாதிரியாரை இன்னமும் காணவில்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் , சரண் அடைந்தவர்களில் பலர் பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு எங்கோ கொண்டு செல்லப்பட்டதை பலர் பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட 110 பேரும் சரண் அடையும் போது கண்கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன என்பதையும் ஆனால் அந்த சாட்சியங்கள் தற்போது வெளிநாடுகளில் வாழ்வதையும் இந்த அறிக்கையினூடாக அவர்களின் உறவுகளுக்கு தெரிவிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், உலகில் உள்ள ஏனைய காணாமல் போனவர்களின் உறவுகளைப்போலவே இலங்கையிலும் காணமல் போனவர்களின் உறவுகள் தமது அன்புக்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற வலியும் ஏக்கமும் நிறைந்த நிச்சயமற்ற நிலைமையில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறு வருடங்களின் முன்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாக நம்பகத் தன்மையான விசாரனைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து காரணமானவர்கள் மீது குற்றம் சுமத்தி தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் என்றும் கேட்டுள்ளது.
வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
- ஆதவா ( செயற்பாடு தெரியாது)
- அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
- அம்பி ( செயற்பாடு தெரியாது)
- அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
- ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
- பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
- பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
- V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
- Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
- பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
- பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
- பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
- பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
- பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
- பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
- பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
- பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
- Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
- எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
- எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
- வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
- கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
- கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
- இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
- இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
- இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
- இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
- இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
- இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
- இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
- இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
- இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
- இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
- இசைபிரியா ( ஊடக பிரிவு)
- ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
- ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
- காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
- கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
- கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
- கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
- கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
- கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
- கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
- குயிலன் ( இராணுவ புலனாய்வு)
- குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
- குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
- குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
- லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
- மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
- மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
- மலரவன் (நிர்வாக சேவை )
- மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
- மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
- மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
- மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
- மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
- முகிலன் (இராணுவ புலனாய்வு)
- முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )
- நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
- நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
- நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
- நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
- நேயன் (புலனாய்வு)
- நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
- நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )
- நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
- நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
- பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
- பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
- Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
- Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)
- பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
- பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
- பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
- புலித்தேவன் (சமாதான செயலகம்)
- புலிமைந்தன் (யோகியின் சாரதி)
- புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
- புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
- ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)
- ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
- ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
- புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
- Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
- Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)
- ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
- ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
- ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
- S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
- சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)
- சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
- செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )
- சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
- சின்னவன் (புலனாய்வு)
- சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)
- Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
- Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
- திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
- திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
- துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
- வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)
- வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
- Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
- Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
- வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
- வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
- வினிதா (நடேசனின் மனைவி )
- வீமன் (கட்டளை தளபதி)
- விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
- யோகன் / சேமணன் (அரசியல் துறை)
- யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)




