திருகோணமலை நோக்கி சென்ற பேருந்து மீது கால்வீச்சு தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பேரூந்து மீது இன்று இரவு வவுனியா தாண்டிக்குளம் சோயோ ஒழுங்கை சந்தியில் வைத்து இனந்தேரியாதோரால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று ஹ த்தால் அனுஸ்டிக்கப்படும் நிலையில் காலை முதல் பற்றமான நிலை காணப்பட்ட வந்தது. இதன் காரணமாக வவுனியாவில் அனைத்து பகுதியிலும் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேரூந்தின் சாரதி காயமடைந்ததுடன் ஏனைய பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கினர்.






