செய்திகள்
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் மீளளிப்பு மற்றும் இறப்புக் கோரல் விண்ணப்பப் படிவங்கள் தொடர்பான நிகழ்வு (படங்கள்)
அட்டன் பிரதேச ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையின் மீளளிப்பு மற்றும் இறப்புக் கோரல் விண்ணப்பப் படிவங்கள் தொடர்பான நிகழ்வு 22.05.2015 இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அட்டன் பிரதேச அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இறப்புக் கோரல் விண்ணப்பத்திற்காக இதுவரையில் மீளளிப்புக் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் வருகை தந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டனர்.
மக்களுடைய தேவைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













