செய்திகள்

மாட்டிறைச்சி சாப்பிட்டது தெய்வ குற்றமென கூறி 28 நாட்கள் அறையில் அடைத்து வைக்கப்பட்ட இளைஞன் மரணம்

மாட்டிறைச்சி சாப்பிட்டது தெய்வ குற்றமென கூறி அதற்கு தண்டனையாக 28 நாட்கள் அறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 31 வயது இளைஞனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று மாவனெல்லை பில்லபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் சில வாரங்களுக்கு முன்னர் தனது நன்பர்களுடன் சென்று மாட்டிறைச்சி உண்டிருந்தநிலையில் அது தொடர்பாக அந்த இளைஞன் வீட்டில் உள்ளோருக்கு தெரிவித்துள்ளார். இதன்போது வீட்டார் இது தொடர்பாக பூசாரி ஒருவருக்கு அறிவித்ததையடுத்து அவர் இந்த விடயம் தெய்வ குற்றமெனவும் அந்த குற்றத்தை கழிக்க இளைஞனை 28 நாட்களுக்கு தனியான அறையில் உணவின்றி அடைத்து வைக்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து வீட்டாரும் அதேபோல் செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டு அந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.