செய்திகள்

ஹரிஷ்ணவியின் கொலையைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று…….

வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் கொலையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை காலை கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்குமாறு இந்தப் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

கலாசார சீரழிவுகளின் அடையாளமா இந்த நல்லாட்சி என்ற பதாதை தாங்கியவாறு இந்த கவன ஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

N5

DSC01374 copy

DSC01375 copy