பாப்பரசரை தரிசிக்க காலி முகத் திடலில் திரண்ட 5 இலட்சம் மக்கள்
இலங்கையின் முதலாவது புனிதராக அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளாரை பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இன்று காலை திருநிலைப்படுத்தியுள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை கலந்து கொள்ளும் விசேட ஆராதனை நிகழ்வு தற்போது கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.
பாப்பரசரைத் தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று மாலையே காலிமுகத் திடலில் கூடத் தொடங்கிவிட்டனர். இன்று காலை பாப்பரசர் பங்கு கொண்ட நிகழ்வு நடைபெற்ற போது சுடார் 5 இலட்சம் மக்கள் அங்கு குவிந்திருந்தார்கள்.
காலிமுகத்திடலில் நடைபெறுற்ற விசேட ஆராதனையின்போதே அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளார் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.








