செய்திகள்

ஆஸி.யில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதோடு, அந்த நாட்டு அதிகாரிகளால் தடுக்கப்பட்டு பின்னர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவர் அம்பகதவில பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

n10