செய்திகள்

சுதந்திரக் கட்சியை சின்னாபின்னமாக்கி சீரழிக்க மகிந்த முயற்சி: சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை சின்­னா­பின்­ன­மாக்கி சீர­ழித்து திரு­டர்­க­ளுடன் சேர்ந்து தப்­பித்­துக்­கொள்ளும் முயற்­சி­யி­லேயே மஹிந்த ராஜபக்ஷ ஈடு­பட்­டுள்ளார் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க குற்றம்சுமத்தியுள்ளார்.

மின்­சாரத் துறை பொறி­யி­ய­லா­ளர்­களின் எதேச்­ச­தி­காரம் உள்­ளது. அவர்கள் தங்­க­ளது கட­மை­களை நிறை­வேற்­று­வ­தில்­லை­ என வும் முன்னாள் ஜனா­தி­பதி குற்றம் சாட்­டி­யுள்ளார். கள­னி தேர்தல் தொகு­தியில் நேற்று முன் தினம் இடம்­பெற்ற சுதந்­திரக் கட்சி ஆத­ர­வா­ளர்கள் கூட்­டத்தில் உரை­யாற்றுகையிலேயே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்று கையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

“எமது கட்சி 20 வரு­ட­காலம் ஆட்­சியில் இருந்­தது. ஆனால் தவ­றுகள் செய்­ததால் ஆட்சி பறி­போ­னது. நாட்­டையும் கட்­சி­யையும் நாச­மாக்கி விட்­டார்கள். இவர்­களால் கட்சி இல்­லாமல் வாழ முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. கட்சி அழிந்­தாலும் நாடு அழிந்­தாலும், மக்கள் சீர­ழிந்­தாலும் இவர்­க­ளுக்கு பிரச்­சி­னை­யில்லை.

மக்­க­ளுக்கு பொய்­களைக் கூறி மீண்டும் ஆட்­சியை பிடித்து சீர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­து­வதே இவர்­க­ளது நோக்­க­மாகும். இது தொடர்பில் கிராமம் கிரா­ம­மாகச் சென்று மக்­களை தெளி­வு­ப­டுத்த வேண்டும். சுதந்­திரக் கட்­சியும் ஐ.தே.க. வும் இணை­வ­தென்­பது முரண்­பாடு மிக்­க­துதான். ஆனால் இன்­றைய நிலையில் நாட்­டையும் மக்­க­ளையும் பற்­றிச் ­சிந்­தித்தே இந்த முடிவை எடுத்தோம்.

அத்­தோடு கட்­சியை கொலை­கா­ரர்­க­ளிடம் அல்லது ஊழல் மோச­டிக்­கா­ரர்­க­ளிடம் கைய­ளிப்­பதா என்ற கேள்­வியும் எம்முன் காணப்­பட்­டது. இன்று நல்­லாட்­சிக்கு எதி­ராக செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் மஹிந்த ராஜபக் ஷ கட்­சியைச் சீர­ழித்து சின்­னா­பின்­ன­மாக்கி திரு­டர்­க­ளுடன் சேர்ந்து வெளி­யேற முயற்­சிக்­கின்றார்.

எனது ஆட்சிக் காலத்தில் கொள்­வ­னவு செய்த ஆயு­தங்­களின் மூலமே ராஜபக்ஷவிற்கு யுத்­தத்தை முடிப்­ப­தற்கு முடிந்­தது. இன்று மின்­சா­ரத்­தடை தொடர்பில் அரசை விமர்­சிக்­கின்­றார்கள். கடந்த ஆட்­சியில் மட்­டு­மல்ல அனைத்து ஆட்சிக் காலங்­க­ளிலும் மின்­சா­ரத்­துறை பொறி­யி­ய­லா­ளர்­களின் எதேச்­ச­தி­காரம் மின்­சார சபைக்குள் இருந்து வரு­கி­றது. பொறி­யி­ய­லா­ளர்கள் இத்­து­றையின் அனைத்­தையும் தமது ஆதிக்­கத்தில் வைத்­துள்­ளனர்.”

R-06