யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள்: அரசாங்கம் தீவிர கவனம் என்கிறார் அமைச்சர் சாகல
யாழ். குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரட்ணாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா 23 இன் கீழ் இரண்டில் எழுப்பிய யாழ். குடாநாட்டில் அதிகரிக்கும் குற் றச் செயல்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சாகல ரட்ணா யக்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “யாழ். குடாநாட்டில் அதிகரிக்கும் குற்றச் செயல்களுடன் குண்டர்களுக்கு மட்டும் தொடர்பில்லை. இவ்வாறான குற்றச் செயல்களுடன் தனிப்பட்ட நபர்களும் தொடர்புபட்டுள்ளார்கள். இங்கு அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசின் தீவிர கவ னம் தொடர்கின்றது. குடாநாட்டுக் குற்றச் செயல்கள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பிலும் அதில் பலியான பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும் எமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதால் இக் கேள்விகளுக்கு என்னால் முழுமையான பதில் வழங்க முடியாததையிட்டு மன்னிப்பு கோருகின்றேன். அடுத்த பாராளுமன்ற அமர்வில் குடா நாட்டு குற்றச் செயல்கள் தொடர்பான முழு மையான பதிலை வழங்குவேன் என்றார்.
R-06




