செய்திகள்
பாராளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி நேற்று வியாழக்கிழமை(19) பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தமது அஞ்சலியினை செலுத்தியுள்ளனர்.




