செய்திகள்

விக்கினேஸ்வரனுக்கு எதிராக 8ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம் நிறைவேற்றும்

எதிர்வரும் 8ஆம் திகதி இரத்தினப்புரி நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக யோசனைகள் நிறைவேற்றப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.
அண்மையில் விக்கினேஸ்வரானால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக தெற்கில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி அன்றைய தினம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் விக்கினேஸ்வரனுக்கு எதிராக யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. -(3)