செய்திகள்

மகனை எப்படியாவது அரசியலுக்கு கொண்டுவருவதற்கு சந்திரிகா முயற்சி

எவர் எதிர்த்தாலும் தனது புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக நியமித்து, அடுத்த தேர்தலுக்கு அவரை தயார்படுத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் இந்த யோசனை கொண்டுவரப்பட்ட போது, கடும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கடும் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
விமுக்தி மக்கள்  மத்தியில் இருக்காத காரணத்தினால், அவரால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது என சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர்கள் முன்னாள்  ஜனாதிபதியின் முகத்திற்கு நேராக கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில், அடுத்த தேர்தலில் விமுக்தியை அத்தனகல்ல தொகுதியில் நிறுத்த முன்னாள்  ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், லண்டனில் இருக்கும் விமுக்தி  குமாரதுங்க விரைவில் இலங்கைக்கு அழைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
n10