செய்திகள்

பொல்கொல்ல நீர்த் தேக்கத்தில் விமான விபத்து

கண்டி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இறங்கிய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நீர்த் தேக்கங்களில் ஏறி இறங்கும் Sea Plane என்றழைக்கப்படும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் விமானத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. நேற்று பிற்பகல் 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விமானத்தை நீர்த்தேக்கத்தில் இறக்கிய போது நீர்த்தேக்கத்தில் காணப்பட்ட மரக்கட்டையொன்றில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது விமானத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -(3)