செய்திகள்

இலங்கை – இந்திய இணைப்பு வீதி தொடர்பாக கலந்துரையாடல்

இந்திய வர்த்தகர்கள் இலங்கையில் தமது முதலீட்டுகளை இலகுவாக மேற்கொள்வதற்கு, இலங்கை – இந்தியாவுக்கு இடையில் வீதி இணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார், இந்தியாவின் ராமேஸ்வரம் ஆகிய பிரதேசங்களுக்கிடையில் வீதி இணைப்பு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்திய முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை இலகுவாக இலங்கையில் மேற்கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது. -(3)