செய்திகள்

கண்மணியே நிம்மதியாய் நீயுறங்கு

கண்மணியே நிம்மதியாய் நீயுறங்கு உன்கல்லறையில் -எம்
பொன்மகளே சகோதரியே இனி விழிமூடு நிரந்தரமாய்
நடந்த வன்கொடுமைக்கு நல்ல தீர்விதுவென நான் சொல்ல வரவில்லை!
நாட்கள் பலகடப்பினும் அரங்கேறிய துயரத்தை நாம் மறக்கபோவதில்லை!

நரகத்தின் வேதனையை நாளெல்லாம் அந்த கயவர்கள் உணரட்டும் -இவை
நடக்கின்ற பிணங்கள் என்று நம்சமுதாயம் காறி உமிழட்டும்
பெரும் பாதகத்தை செய்துநின்ற அந்தபாவியர்க்கு விடிவில்லை!
மேன்முறையீடு செய்தாலும் சிறைவிட்டு என்றும் வெளிவரப் போவதில்லை!

பெண்ணுக்கு பெருமை தந்து அழகு பார்கும் தமிழ் மண்ணிலே -காம
பேய்களை நீ விரட்டவேண்டும்மம்மா காவல் தெய்வமாய் நின்று
விண்ணிலே சுடர்கின்ற சூரியனின் நெருப்பாகி எரிப்பாயே
உன் அநீதிக்கு துணைபோன அத்தனை பேரினதும் மனசாட்சியை என்றும் !

பிறேமலதா பஞ்சாட்சரம்