செய்திகள்

தங்கொட்டுவ சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

தங்கொடுவ பகுதியில் எரியூட்டப்பட்ட வேனில் இருந்து கருகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பம் கொடுக்கல் வாங்கலினால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் ​வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் சந்தேநபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலை செய்த பின்னர் சடலங்களை வேனுக்குள் வைத்து. பின்னர் பெற்றோல் குண்டு மூலம் சந்தேநபர்களால் குறித்த வேன் எரியூட்டப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

n10