செய்திகள்

மழை அதிகரிக்கும்! இடி , மின்னல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்

நாட்டில் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய கால நிலை அதிகரிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமெனவும் குறிப்பாக சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யுமென கூறப்பட்டுள்ளது.
இதேவேளை மழை பெய்யும் நேரத்தில் இடி , மின்னல் நிலவுமெனவும் இதன்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)