செய்திகள்

வட மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் – பிரித்தானிய தமிழ் வைத்தியர்கள் சந்திப்பு

லண்டனில் உள்ள தமிழ் வைத்தியர்கள் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கும் இடையில்  கடந்த சனிக்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

லண்டனிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் சத்தியலிங்கம் எதிர்காலத்தில் வட மாகாண சுகாதார துறையின் அபிவிருத்தியில் லண்டனில் வாழும் வைத்தியர்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் இயங்கும் பல்கலைகழக மாணவர்களை மேற்படிப்பிற்காக லண்டன் பல்கலைகழகங்களில் அனுமதித்தல், வட கிழக்கு மாகாணங்களில் கிராமிய ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரத்தை உயர்த்துதல், வட மாகாணத்தில் வசிக்கும் மக்களின் பொருளாதார மேம்பாடு, வட மாகாண சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள நீண்டகால திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கல் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.